Thuppakki full movie

10,000 அடி உயரத்தில் உல்லாசப் பயணிகளுக்காக சொர்க்கத்தை அமைக்கும் ஆஸ்திரியா!


இதனுள் இருந்து பார்க்கும் போது மலையின் பெரும்பகுதியை பார்த்து விடலாம் ,Pitztal glacier எனும் கூடமானது மலையேறுபவர்கள் ஓய்வு பெறுவதற்கு சிறந்த இடமாகவும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும் அமைக்கப்படவுள்ளது.



ஆண்களை விட பெண்கள் புத்திசாலித்தனமானவர்கள்: லண்டன் ஆய்வில் தகவல்

width="200"


 
கடந்த நூற்றாண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், பொது அறிவு திறன் பெண்களிடம் குறைவாக இருப்பதாக கண்டறியப்பட்டது. அந்த விஷயத்தில் ஆண்கள் அறிவாளிகளாக திகழ்ந்தனர். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. சமீபத்தில் இரு பாலரிடமும் பொது அறிவு திறன் குறித்த ஆய்வு நடத்தப்பட்டது.
 
அதில் தெரிய வந்துள்ள விவரங்கள் டெய்லி மெயில் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
 
கடந்த 100 ஆண்டுகளாக ஆண்கள் மற்றும் பெண்களின் அறிவுத்திறன் வளர்ச்சி அடைந்து வந்துள்ளது. அதே சமயத்தில் அறிவுத்திறன் வளர்ச்சி பெண்களிடம் அதிகமாக உள்ளது. இது நவீனத்தின் விளைவுகள் ஆகும். நவீன உலக சூழலில், நமது மூளை நிறைய விஷயங்களை கிரகிக்கின்றன. இதனால் பொது அறிவுத்திறன் வளர்ந்துள்ளது. பெண்கள் மீதான நவீனத்தின் முழு தாக்கமும், அவர்களை அறிவுத் திறனில் உயரத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது.
 
ஒருவரின் அறிவு வளர்ச்சிக்கு மரபணு காரணமில்லை, அது மட்டுமே அறிவை வளர்க்க முடியாது என்பது ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. நவீனமும், உலக தொடர்புகளும் மீடியா போன்ற பலமான தகவல் தொடர்புகளும் அறிவு வளர்ச்சிக்கு முக்கிய காரணகளாக உள்ளன.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 




டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு

width="200"



அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே சென்றது. சில மாதங்களுக்கு முன்பு ஒரு டாலரின் மதிப்பு 58 ரூபாயாக இருந்தது. சமீபத்தில் 57 ரூபாயானது. இதனால் இறக்குமதி பொருட்களுக்கு அதிக தொகை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வந்ததால் மத்திய அரசு கவலை அடைந்தது. இந்நிலையில், ஆறுதல் அளிக்கும் விதமாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 19 பைசா உயர்ந்துள்ளது.

அதாவது ஒரு டாலரின் விலை ரூ.57.15-ல் இருந்து ரூ.56.96 ஆக குறைந்துள்ளது.




நீங்கள் பார்த்து இருக்க முடியாத பறக்கும் மீன்கள்!

நாம் இப்பதிவின் மூலம் பறக்கும் மீன்களை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கின்றோம்.

இவ்வகை மீன்கள் அத்லாந்திக், பசுபிக், இந்து மா சமுத்திரம் ஆகிய சமுத்திரங்கள் உட்பட பெரும்பாலான சமுத்திரங்களில் வாழ்கின்றன.

அற்புதமான இம்மீன்களின் ஒரு தொகை புகைப்படங்கள் எமக்கு கிடைக்கப் பெற்று உள்ளன. இவற்றை உங்கள் பார்வைக்கு தருகின்றோம்.

















அழகான கனடா, அற்புதமான புகைப்படங்களில்!

கனடா நாட்டின் அழகை காட்டுகின்ற அற்புதமான புகைப்படங்கள் கொண்ட தொகுப்பு இது.

நாம் இணையத்தில் நடத்திய தேடுதல் வேட்டையில் இப்புகைப்படங்கள் கிடைக்கப் பெற்று இருக்கின்றன.

இவற்றை உங்கள் இரசனைக்கு தருகின்றோம்.






























நீங்கள் பார்த்து இருக்க முடியாத டைட்டானிக் கப்பல், புதிய புகைப்படங்கள்!


டைட்டானிக் கப்பலுக்கு விபத்தில் ஏற்பட்ட அழிவை காட்டுகின்ற புதிய புகைப்படங்கள் இவை.

National Geographic Magazine இல் கடந்த ஏப்ரம் மாதம் இப்புகைப்படங்கள் வெளியாகி இருந்தன.

நாம் இணையத்தில் நடத்திய தேடுதல் வேட்டையில் கிடைக்கப் பெற்று உள்ளன.

இவற்றை உங்கள் பார்வைக்கு தருகின்றோம்.











செவ்வாய் கிரகத்திலும் தண்ணீர் உள்ளது: விஞ்ஞானிகள் தகவல்

width="200"


 
செவ்வாய் கிரகத்தில் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அங்கு வடக்கு மற்றும் தெற்கு துருவகங்களில் தண்ணீர் உள்ளது என்றும், மைய பகதி மிகவும் காய்ந்து இருப்பதாகவும் வாஷிங்டனை சேர்ந்த எரிக்ஹாவ்ரி என்ற விஞ்ஞானி தெரிவித்து இருந்தார்.
 
தற்போது நடைபெற்ற புதிய ஆய்வு மூலம் அதிசயிக்கத்தக்க முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி செவ்வாய் கிரகத்தில் மைய பகுதியிலும் பெருமளவில் தண்ணீர் உள்ளது.
 
அங்கு பூமியில் உள்ள அணை கட்டுகளை போன்று பெருமளவில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதற்கு அங்குள்ள ஏராளமான எரிமலைகள் காரணமாக இருக்கலாம். ஏனெனில் அவை வெடித்து சிதறியபோது செவ்வாய்கிரகத்தின் ஆழமான பகுதியில் இருந்து தண்ணீர் மேலே வந்து இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.




விமானத்தில் இறந்தவருடன் பயணம் செய்த பெண்: டிக்கெட் பணத்தை திரும்ப பெற்றார்

width="200"


 
சுவீடனை சேர்ந்த பெண் பீட்டர்சன். இவர் கென்யாவில் உள்ள டர் எஸ்சலாம் என்ற இடத்தில் இருந்து ஆம்ஸ்டர்டாமுக்கு பயணம் செய்தார். விமானத்தில் அவருக்கு அருகே 30 வயது நபர் ஒருவர் அமர்ந்திருந்தார்.
 
நோய்வாய் பட்டு உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த அவர் விமானம் நடுவானில் பறந்தபோது பரிதாபமாக இறந்தார். இதை அறிந்த பீட்டர்சன் தனக்கு வேறு இருக்கை ஒதுக்கும்படி விமான பணிப்பெண்களிடம் கேட்டு கொண்டார். அனால் வேறு இருக்கை எதுவும் இல்லை என்று அவர்கள் கூறிவிட்டனர்.
 
எனவே, அவர் இறந்தவரின் பிணத்தின் அருகில் அமர்ந்து பயணம் செய்யும் சூழ்நிலை ஏற்பட்டது. இது அவருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. பயத்தில் அவரது உடல் வியர்த்தது. இருந்தும் எப்படியோ 10 மணி நேரம் பிணத்துடன் அமர்ந்து பயணம் செய்தார்.
 
ஆம்ஸ்டர்டாம் வந்து சேர்ந்த அவர் கென்யா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு இ-மெயில் மூலம் புகார் செய்தார். அவரது புகாரை ஏற்று கொண்ட நிறுவனம் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டது. மேலும், விமான டிக்கெட் பாதி பணம் ரூ.75 ஆயிரத்தை திரும்ப வழங்கியது.




 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India