பயணிகளைக் காப்பாற்ற தனது உயிரைக் கொடுத்த உன்னத சாரதி

ஒரு வாகனத்தில் பயணிக்கும் பயணிகளின் உயிர் எப்போதும் சாரதியின் கையில்தான் இருக்கும் என்பார்கள்.
ஆனால் அதையும் மீறி பயணிகளின் உயிரைப்பறிக்க எங்கிருந்தோ பறந்து வந்த இரும்புத் தகட்டிடமிருந்து பயணிகளைக் காப்பாற்றுவதற்காக தனது உயிரைத் தியாகம் செய்திருக்கின்றார் சீனாவைச் சேர்ந்த சாரதி ஒருவர்.

அதாவது 24 பயணிகளை ஏற்றியபடி பேருந்து ஒன்றைச் செலுத்திக் கொண்டிருந்த 48 வயதான வூ பின் என்ற சாரதி தமது பேருந்தினை நோக்கி இரும்புத் தகடு ஒன்று பறந்து வருவதை அவதானித்தார்.

தொடர்ந்து பயணிகளைக் காப்பாற்றும் முயற்சியில் மும்முரமாக இறங்கிய வூ குறித்த தகட்டின் தாக்குதலுக்கு இலக்காயி உயிரை நீர்த்தார். இதன் போது தகட்டுத் துண்டிலிருந்து பறந்த சிறிய துண்டுகளின் தாக்குதலுக்கு உள்





ளாகி பயணிகளும் சிறு சிறு காயங்களுக்கு உட்பட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India