பூமியை எதிர்நோக்கி வரும் ராட்சத எரிகல்


ஸ்பெயினில் உள்ள லாசக்ரா வானிலை மைய விண்வெளி நிபுணர்கள் ஒரு எரிகல்லை கண்டுபிடித்து அதற்கு 'டி.ஏ.14' என பெயரிட்டுள்ளனர்.

1 லட்சத்து 40 ஆயிரம் தொன் எடை கொண்ட இந்த எரிகல் (2013) பெப்ரவரியில் பூமியை நெருங்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது பூமியை நெருங்கும் போது பல பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக பூமியை சுற்றி வரும் செயற்கை கோள்களில் மோதி அவை அழியும் வாய்ப்பு உள்ளது என்றும் அல்லது அவற்றின் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்படலாம் எனவும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து 'நாசா' விண்வெளி மையம் தெரிவித்துள்ளதாவது, 'டி.ஏ.14' எரிகல் பூமியை தாக்கும் போது 0.031 சதவீதம் மட்டுமே பாதிப்பு ஏற்படும்.

இதற்குமுன்பு, கடந்த 1908-ம் ஆண்டு இதுபோன்று ராட்சத எரிகல் சைபீரியா காட்டில் விழுந்தபோது பல நூறு சதுர மைல்கள் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.




0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India