அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக வர்த்தக மைய கட்டிடம் இருந்தது. இரட்டை கோபுரம் என்று அழைக்கப்பட்ட அந்த கட்டிடம் உலகிலேயே மிக உயரமான கட்டிடம் என்ற பெருமையை பெற்று இருந்தது.
கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந்தேதி அந்த கட்டிடத்தை அல்கொய்தா தீவிரவாதிகள் விமானத்தை மோத வைத்து தகர்த்து தரை மட்டமாக்கினர். இதில் 2,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
உலக பெருமை வாய்ந்த அந்த கட்டிடத்தை மீண்டும் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி நியூயார்க்கில் மீண்டும் இரட்டை கோபுரங்களுடன் வர்த்தக மைய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
அதில், ஒரு கட்டிடம் 1250அடி (381 மீட்டர்) உயரத்திலும், மற்றொன்று 1,776 அடி (541.3 மீட்டர்) உயரத்திலும் கட்டப்படுகிறது. அதில் 1250 அடி உயர கோபுரம் கட்டி முடிக்கப்படும் தறுவாயில் உள்ளது.
நேற்று இங்கு மேலும் 4 மாடிகள் கட்ட இரும்புதூண் பொருத்தப்பட்டது. இதன் மூலம் நியூயார்க் நகரிலேயே மிக உயரமான கட்டிடம் என்ற அந்தஸ்தை பெற்றது.
இதற்கு முன்பு இந்த பெருமையை எம்பயர் ஸ்டேட் கட்டிடம் பெற்றிருந்தது. மற்றொரு கோபுரம் அடுத்த ஆண்டில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கட்டிடம் 104 அடுக்குமாடிகளை கொண்டதாக கட்டப்படுகிறது.


Paris Time


0 comments:
Post a Comment