ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்றெடுத்த தாய்


காஷ்மீரில் அஃப்ரோஸா(வயது 25) என்ற பெண்ணுக்கு உள்ளூர் வைத்தியசாலையில் அறுவை சிகிச்சை மூலம் 5 குழந்தைகள் பிறந்துள்ளது.
மத்திய காஷ்மீரின் பத்காம் மாவட்டத்தில் பீர்வா கிராமத்தில் அஃப்ரோஸா என்ற பெண்ணுக்கு முதல் குழந்தை பிறந்து 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த 5 குழந்தைகளும் பிறந்துள்ளன.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் இதுவரை யாரும் இதுபோன்று 5 குழந்தைகளை பெற்றதில்லை என்பதால் முதல்முறையாக அஃப்ரோஸா 5 குழந்தைகளை ஒரே சமயத்தில் பெற்றெடுத்து சாதனை படைத்துள்ளார்.

இதில் 2 பெண் குழந்தைகளும், 3 ஆண் குழந்தைகளும் உயிருடன் உள்ளதாகவும் அதில் ஒரு பெண் குழந்தை மட்டும் ஷேர்-இ-காஷ்மீர் மருத்துவ அறிவியல் மையத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் டொக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India