இங்கிலாந்தில் புல்லட் புரூப் உறையுடன் கூடிய ஐபோன்கள்


விலை உயர்ந்த ஆப்பிள் ஐபோன் இனிமேல் புல்லட் புரூப் உறையுடன் வரப் போகிறது. எனவே இனி அதை யாரும் சுட முடியாது.

புகழ்பெற்ற வீடியோ இணைய தளமான யூடியூப்பில் பார்த்தால் தெரியும். விலையுயர்ந்த தனது ஆப்பிள் ஐபோனை ஒருவர் சமீபத்தில் கைத்துப்பாக்கியால் சரமாரியாக பல கோணங்களில் இருந்து சுட்டுத் தள்ளிய காட்சி வெளியானது.

இவ்வளவு விலை கொடுத்து வாங்கிய ஐபோன் எவ்வளவுதான் பாதுகாப்பானது, சுட்டால் அதற்கு எவ்வளவு சேதம் ஏற்படுகிறது என்று பார்க்கவே கண்டபடி சுட்டுத் தள்ளியதாக அதன் உரிமையாளர் கூறியிருந்தார்.

இதை கவுரவ குறைச்சலாக எடுத்துக் கொண்டு விட்டது ஆப்பிள் நிறுவனம். இனி துப்பாக்கியால் சுட்டாலும் உடைந்து சிதறாத ஐபோன் தயாரிக்க அது முடிவு செய்து விட்டதாக லண்டனில் வெளிவரும் டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த புல்லட் புரூப் உறைக்கு கூடுதல் விலை வைக்கப் போவதில்லை என்றும் ஆப்பிள் கூறி விட்டதாம். வழக்கமான ஐபோன் மீது ஒரு அங்குல உயர ஸ்டீல் தகடு பதித்ததாக உறை இருக்கும். அதன் மீது 0.50 கேலிபர் ரக துப்பாக்கியால் சுட்டாலும் குண்டு பட்டு தெறிக்குமே தவிர போனை துளைக்காது.

இந்த புல்லட் புரூப் தவிர இனி ஐபோன் வாங்குவோருக்கு மாதிரி குண்டு ஒன்றையும் போனசாக அளிக்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.

எனினும் ஐபோனின் பின்பகுதியில் கமெராவுக்கான ஒரு இடம் மட்டும் மூடப்படாமல் விடப்படும். அதை குறி வைத்து சுட்டால் ஐபோனின் கதி அதோகதிதான் என்கிறது அந்த செய்தி.




0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India