இதுவரை உலகில் கண்டுபிடிக்கப்பட்டவற்றில் மிகப்பழமையானதாகக் கருதப்படும் சுமார் 300 மில்லியன் வருடங்கள் பழமைவாய்ந்த பூச்சியொன்றின் சுவடுகளை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
இச் சுவட்டின் நீளம் 3 அங்குலமாகும்.
இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,
இப்பூச்சியானது 300 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் சேற்றில் உட்கார்ந்து பின்னர் பறந்து சென்றிருக்கலாம் எனவும் காலப்போக்கில் அச்சேறு இறுகித் திண்மமாக மாறியதாகவும் அதனாலேயே இதன் சுவடு மாறாமல் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
0 comments:
Post a Comment