அமெரிக்காவில் 3 பேருக்கு ரூ.3200 கோடி: லாட்டரியில் மெகா பரிசு

width="200"


 
அமெரிக்காவில் உலகிலேயே அதிக பரிசு தொகை கொண்ட ரூ.3200 கோடி ஜாக்பாட் லாட்டரி வெளியிடப்பட்டது. அந்த பரிசு சீட்டு குலுக்கல் அட்லாண்டா நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் 2-4-23-38-46 என்ற நம்பர் உள்ள சீட்டுக்கு மெகா பரிசு கிடைத்தது. ஆனால் அந்த லாட்டரி சீட்டை வாங்கிய அதிர்ஷ்டசாலி யார் என தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் அந்த அதிர்ஷ்ட லாட்டரி சீட்டை 3 பேர் வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
 
மேரிலாண்ட், கன்னாஸ், அல்லது இல்லினாய்ஸ் நகரில் விற்பனை செய்திருக்க வேண்டும் என கருதப்படுகிறது. ஆனால், அந்த அதிர்ஷ்ட சீட்டை வாங்கியது யார் என பெயர் குறிப்பிடப்படவில்லை. ரூ.3200 கோடி பரிசு தொகையில் 50 சதவீதம் வரி போக ரூ.1600 கோடி மட்டுமே இவர்களுக்கு கிடைக்கும். அதன்படி 3 பேருக்கும் தலா ரூ.533 கோடி கிடைக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
இவர்களுக்கு ஒரே நேரத்தில் பரிசு தொகை முழுவதும் வழங்கப்படுமா? அல்லது 26 தவணைகளில் வழங்கப்படுமா? என தெரியவில்லை. 



Sent from my iPhone

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India