மார்பக புற்றுநோய்க்கு புதிய மருந்து

width="200"


 
மார்பக புற்றுநோய்க்கு இன்னும் 3 ஆண்டுகளில் புதிய மருந்து கண்டு பிடிக்கப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். உலகில் லட்சக்கணக்கான பெண்கள் மார்பக புற்று நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நோயை குணப்படுத்த விஞ்ஞானிகள் மருந்து தயாரிக்கும் பணியில் மும்முரமாக உள்ளனர். அமெரிக்காவின் ஜார்ஜியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர்வதேச நிபுணர்கள் குழு இந்த மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
 
தற்போது அந்த பணி முடிந்து விட்டது.   அதை எலிகளின் உடலில் செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. அதன் மூலம் அந்த ஊசி மருந்து மார்பக புற்றுநோயை மட்டுமின்றி, கணைய புற்று நோயையும் குணப்படுத்தக் கூடியது என கண்டறியப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து அந்த மருந்தை மார்பக புற்றுநோயால் பாதித்த பெண்ணின் உடலில் செலுத்தி பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
 
இந்த சோதனைக்கூட அளவில் உள்ளது. இதன் மூலம் 90 சதவீத மார்பக புற்றுநோய் குணமாகுகிறது. எனவே, முற்றிலும் நோய் குணமாகும் வகையில் மருந்து தயாரிக்கப்படுகிறது. அவை வருகிற 2013-ம் ஆண்டு இறுதியில் அதாவது 3 ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.





0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India