வீட்டுக்குள் 4 நாள் சிக்கி தவித்த திருடன்

width="200"


 
சீனாவில் உள்ள ஜைகாங் என்ற இடத்தை சேர்ந்தவன் ஹீ. திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்தான். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திருடுவதற்காக சென்றான். 6-வது மாடியில் உள்ள ஒரு வீடு திறந்து கிடந்தது.அதற்குள் நைசாக நுழைந்து ஒரு அறையில் பதுங்கி இருந்தான்.
அப்போது வீட்டுக்காரர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டார்.
 
ஹீ வீட்டுக்குள் அகப்பட்டு கொண்டான். அங்கிருந்து அவனால் வெளிவர முடியவில்லை. 4 நாளாக வீட்டுக்காரர் வீட்டுக்கு திரும்பி வரவே இல்லை. இத்தனை நாளும் உள்ளேயே கிடந்தான். அவனிடம் செல்போன் இருந்தது. ஆனாலும் செல்போன் பேட்டரி சார்ஜ் குறைந்து விட்டதால் யாரிமும் போனில் பேசி உதவி கேட்க முடியவில்லை.
 
வீட்டில் சாப்பிட எந்த உணவும் இல்லை. இதனால் 4 நாளும் பட்டினி கிடந்தான். 4 நாட்கள் கழித்து வீட்டுக்காரர் வந்து கதவை திறந்தார். அப்போது ஹீ வீட்டுக்குள் சோர்வான நிலையில இருப்பதை பார்த்தார். உடனே போலீசில் புகார் கொடுத்தார். அவர்கள் வந்து கைது செய்து அழைத்து சென்றனர்.





0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India